Tuesday, September 15, 2009

எண்டெ ஹிருதயமே? ஐ லவ் யூ!!!

இப்படித்தான் 7ம் கிளாஸ் படிக்கும் போது. கல்யாணி டீச்சருக்கும்.
ஸ்ரீநிவாசன் சாருக்கும் ஒரு இது.
இவர்கள் மதுரையிலிருந்து திருப்பூவணம் தினமும் வந்து பாடம்
சொல்லிக்கொடுப்பவர்கள்.
எனவே பள்ளியே சில நேரம் அந்தரங்க அரங்கமாகிவிடுவதுண்டு.
`பசங்களா! 7ம் பாடத்தை நல்லா படிங்கண்ணு சொல்லிட்டு` கல்யாணி டீச்சர்
ஸ்ரீநிவாசன் சாரோட கடலை போட ஆரம்பிச்சுட்டாங்க!
இப்படி மாணவர்களுக்கு முன் செய்தால் நமக்கு படிப்பில் ஏன் புத்தி
போகிறது?
மெல்ல, மெல்ல அவர்கள் சம்பாஷணையில் லயித்து, ஓரிடத்தில் கல்யாணி
டீச்சருக்கு உதவுவதாக நினைத்துக் கொண்டு ஊடே புகுந்து பதில் சொல்ல. நல்ல
அடி! பெரியவங்க பேச்சை ஏண்டா கேட்டேன்னு!
அன்றிலிருந்து இந்தப் பெரியவங்க விவகாரத்துக்கே போறதில்லை! ;-)

க.>



பாவம் வசந்தன் சார்.

அன்று துவங்கிய நிங்கள் தமிழ்த் தொண்டு துவளாமல் தொடர்ந்து வருகிறது.

பென்னேஸ்வரன்



This is really literature of the first order. I am thrilled to read this episode. I dont think even avant garde french writers did so well narrate an ordinary incident as our Kamalam has.Kudos to you and may God revive in writers this kind of sincereity amazed by the child like amusement!
Narasiah



சிரிக்கலை கமலம், அந்த வயசுப் பெண்ணின் மனநிலையைப் பிரதிபலிக்கும் கடிதம் இது.
நல்லா இருக்கு மலரும் நினைவுகள். பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி.

Geetha Sambasivam


சகோதரி கமலம் அவர்களே

நீங்கள் கவிதை எழுதியது அந்த பெண்ணிற்கு பிடிக்காமல் போனதன் காரணம் என்ன
தெரியுமா

1. அவள் அந்தரங்கம் நீங்கள் உணர்ந்து கொண்டது

2. பாப்பாத்தி என்று விளித்தது


பெண்களின் மனோ நிலையே விசித்திரம்தான்

ஒரு இரு வரிக் கவிதையில் நான் எழுதி இருந்தேன்


"தவிர்த்த பார்வை அதனால் தவித்த பாவை" என்று

பெண்கள் அவர்களைப் பார்த்தால் கோபிப்பார்கள்

பார்க்காவிட்டால் தவித்துப் போய்விடுவார்கள்
இது எப்போதும் பெண்களின் மன நிலை

நிங்கள் கவிதை ஆ சின்ன வயசிலேயெ ஒண்ணாங் க்ளாசாக்கம்

அன்புடன்
தமிழ்த்தேனீ


எங்கள் ஊரில் கவுண்டர்கள் குடும்பத்திலும் சில தலித்துக்கள் குடும்பத்திலும்
இப்படிப் பாப்பாத்தி என்கிற பெயர் உண்டு

பெண் கொஞ்சம் சிகப்பாக இருந்தால் பாப்பாத்தி என்று பெயர் வைப்பார்கள். என்
நண்பர்களின் சகோதரிகள் சிலரின் பெயர் பாப்பாத்தி.

எனக்கும் ஒரு பாப்பாத்தி டீச்சர் இருந்தார். ஆனால் அவருக்குக் காதல் கடிதம்
எழுதிக் கொடுக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டவில்லை.

அந்த சொந்த டீச்சரே சொந்த முயற்சியில் சிலருக்கு சில காதல் கடிதங்கள் எழுதி
சில சிக்கல்களில பிறகு மாட்டிக் கொண்டதாக ஒரு சிறிய ஞாபகம்.
பென்னேஸ்வரன்


சேச்சி, சதியமாயிட்டு சிரிக்கண்டான்னு பறஞ்சால் எப்படி! ஒரு பெண்ணுக்கு எப்படி
ஆண் மனதில் வார்த்தைகள் வரும்? அதுவும் அந்த சின்ன வயதில்!
இன்னொரு வளர்ந்த பெண்ணுக்கு ஆணின் சொற்கள் சட்டென்று பிடிபடுமே!

பட்சே சுயம்பாயிட்டு வந்ந வார்த்தகள் சுந்தரமாயிட்டு உண்டு! எண்ட
முகமெல்லாம் சிரிப்பு பூத்து போயி!!

ஓகை நடராஜன்.

No comments:

Post a Comment