Tuesday, July 21, 2009

பட்டாம்பூச்சி




அன்பிற்குரிய கமலா அவர்களுக்கு, ,
வணக்கம்.தங்கள் ஆர்வம் கலந்த இணையப் பங்களிப்பைப் பாராட்டும் வகையில்,வலைப் பதிவர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு ஊக்கப்படுத்திக்கொள்ளும்
பட்டாம்பூச்சி விருதைத் தங்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறேன்.
எனக்கு இவ் விருதை அளித்திருப்பவர் முனைவர் திரு குணசீலன் அவர்கள்.
http://www.gunathamizh.blogspot.com/

நான் பெற்ற பெருமையைத் தங்களுக்கு அளிக்க என் மனம் விரும்புகிறது.

தமிழ் மீது கொண்ட தீராக்காதலால் வலை எழுத்தில் ஈடுபட்டிருக்கும் தாங்கள் தரமான தமிழ்ப் படைப்புக்களை அளித்தும்,அவ்வாறானவற்றை அறிமுகம் செய்தும் தமிழுக்கு வளம் சேர்க்க வேண்டுமெனத் தங்களை வேண்டுகிறேன்.

இவ் விருதின் படத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.அதை உங்கள் வலையில் போட்டுக் கொள்ளலாம். பிறகு சிறந்த வலைப் பதிவர் எனத் தாங்கள் கருதும் ஐவருக்குஅவற்றை நீங்களும் வழங்கலாம்.
அன்புடன்,

எம்.ஏ.சுசீலா,புது தில்லி
(தமிழ்ப்பேராசிரியர்-ஓய்வு,பாத்திமாக்கல்லூரி,மதுரை)
D II 208 KIDWAI NAGAR WEST,NEW DELHI110023
http://www.masusila.blogspot.com/





Email from MA Susila:-

From: எம்.ஏ. சுசீலா
To: kamalam.online@yahoo.com
Sent: Saturday, July 25, 2009 10:11:21 PM
Subject: எம்.ஏ. சுசீலா

எம்.ஏ. சுசீலா


விருதுப்பகிர்வு

Posted: 24 Jul 2009 10:22 AM PDT
விருதுகளும் , பரிசுகளும் நம்மை மேன்மேலும் ஊக்கப்படுத்துவதற்காக வழங்கப்படுகின்றனவேயன்றி அவை நம் செயல்பாட்டின் முடிந்த முடிவுகளல்ல.முனைவர் திரு குணசீலன் அவர்கள் எனக்கு அளித்த பட்டாம்பூச்சி விருதை - அவர் என் மீதும் என் எழுத்தின் மீதும் கொண்ட மதிப்பினால் மட்டுமே அளித்திருப்பதாக எண்ணி அதை ஏற்றுக் கொண்டபடி , தொடர்ந்த வலைப் பங்களிப்பில் முயன்று வருகிறேன். விருதை அளித்தபோது அவர் என்னிடம் கேட்டுக்

No comments:

Post a Comment