Saturday, February 14, 2009

சிவகாமி - பாகம் 3

சிவகாமி----- கொட்டு, பறை, மோளம், இதெல்லாமே எங்களிலிருந்துதான்
பிறந்ததால்,பண்டிதர்களின் பார்வை தேவையில்லை, என்றாலும் நீங்கள் இவ்வளவு
அருமையாக அவர்களைப்பற்றி கூறுவதால் உங்கள் ஆசிரியர்களை பார்க்க
நேர்ந்தால் நிச்சயம் பேசுவேன். எங்கள்

குழுவுக்கென்ரு பார்வையுண்டு. அந்த நாடககுழுவோடு இதே சிங்கையில்
நிகழ்ச்சி நடத்த விரைவிலேயே வரலாம்.

ஞான் - ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது அம்மா,ஆமாம், இடதுசாரி இலக்கியம்
என்றால் என்ன? அதுவும் தலீத் இலக்கியம் தானா?

சிவ-----தலீத்தின் ப்ரச்சினைகளும் போராட்டங்களும், தலீத்திய விடுதலைக்கான
கருவும் சார்ந்து வந்தால் நிச்சயமாக அப்படிக்கொள்ளலாம்.

ஞான் ----இன்று மலையாள இலக்கிய உலகில் கடம்பனிட்ட ராமக்ரிஷ்ணன்,
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு போன்ரோரின் கவிதைகள் மக்களோடு iக்கிய
மாயுள்ளது. தமிழில் பாரதிக்குப்பிறகு, நவகவிதைகளின் உள்ளடக்கம் பரந்த
அளவில் சென்றடையவில்லை,, அறிவுஜீவித்தனமான கவிதைகள் என்றாலே ஒரு மாதிரி
அதிர்ச்சியின் வெளிப்பாடே தவிர, அதில் creative என்பதே இல்லை எனும்
குற்றச்சாட்டு உண்மையா?

சிவ---புதுமை என்பதாலேயே அது உயர்வு அல்ல. creativity என்பது
கூர்மையாகவும் அதே சமயத்தில் மிக இயல்பாக உணர்வைக்கிளறும்

படிமங்களை க்கொண்ட எழுத்துக்களாலும் கொண்டு வரமுடியும்.

ஞான் --பெண்களின் எழுத்தில் அன்றைய லக்ஷ்மியின் பாதிப்பில்தான்
உழன்றுகொண்டிருக்கிறோமாம். அல்ல்து சிவசங்கரித்தனமான எழுத்தில்

கரைந்து கொண்டிருக்கிறார்களாம், சமூகககதைகள் என்றாலே வெறும்
துணுக்குத்தோரணமே. பரிசோதனை உத்திகளில் எழுதுபவர்களின்

எழுத்து மட்டுமே கவனிக்கப்படுகிறது, என்ற கருத்தை எப்படி தவறு என்று நிரூபிப்பது?

சிவ-----முதலில் அவர்கள் நம்மை முழுமையாக படிக்கவில்லையென்றே
சொல்லமுடியும், ஆமாம், இது பற்றி, உங்கள் கருத்தென்ன?

?ஞான் --லக்ஷ்மியின் தங்கமாம்பழம் என்ற நூலை படிக்கும்போது எனக்கு 11
அல்லது 12 வயதிருக்கும் அப்பொழுது சிறுவர் அரங்கில் எழுதிக்கொண்டிருந்த
காலகட்டம், ரெ.கா. சாரின் சுழல்பந்து சிறுகதை அபாரமாய் மனதைக்கவர்ந்தது . ஊஹூம், தப்பு,
அது கவர்ந்தது அல்ல. மனதில் அப்படியே அந்த நடை, கதைக்கரு, கதை, சொல்லியவிதம் , மிகவும் பிடித்துப்போயிற்று.
உடனே மாணவர் அரங்கில் கதைகள் எழுத ஆசை வந்தது.
ஆனால் தி.ஜா, லசரா என்ற இரு சிகரங்களை படித்தபோது பரவசத்தில்
விம்மிவிம்மி அழுதிருக்கிறேன்

எண்டெ உள்ளம் கொள்ளை கொண்ட எழுத்துக்கள் அம்மா, நெஞ்சை அள்ளிய தமிழ் ,
அவர்கள் எழுத்தில் எந்த பொய்மையும்,

அதிரடி உத்திகளும் ஞான் காண்வேயில்லை.இவர்கள் எழுத்தில் மனிதனின் அசலான
வாழ்க்கையை மெய்ப்பாடுகள் நிறைந்த கருவூலம் வழி அதன் இயல்புடனும்
அழகுடனும் சொல்லும் ஆற்றலை லசரா போதித்தார், தி ஜா,எனும் சான்றோரின்
எழுத்தில் மனிதனேயம் மெல்லிய சரடுபோல் கண்ணுக்குத்தெரியாமலும் அதே
நேரத்தில் சமகாலப்ப்ரக்ஞையும் சமுதாய வாழ்க்கையின் நிதர்சனத்தை
உயிர்த்துவம்போல் அதன் ஆளுமை கெடாது எழுதுவது எப்படி எனும்
அற்புதத்தையும் கற்பித்தார். இதேபோலவே மஹாகவி பாரதி,க்கவிதைகளில்
இதிகாசம் காண்பவள் ஞான்.. எத்தனை முறை படித்தாலும் இன்றும் என்னை
ப்ரம்மிக்க வைக்கும் கவிதைகள் பாரதிக்கவிதைகள்.தமிழில் இந்த பிதாமகன்களை
யெல்லாம் உனர்ந்ததாலேயே சமூக நாவல்களை குறைத்துப்பேசுவதை என்னால்
ஏற்றுகொள்ள முடியவில்லை.

சிவ--- சேச்சி, மலையாள இலக்கிய உலகம் எப்படியிருக்கிறது ?அங்கு
உங்களைக்கவர்ந்த எழுத்தாளர்கள் யார்?

ஞான் -- மிகுந்த நம்பிக்கையோடிருக்கிறது. 20 வருடங்களுக்கு
முன்னால்பாரதிக்கீடான கவிஞரே இல்லையென்று ஞான் பேசியபோது கோபப்பட்ட
எழுத்தாளர்களின் அலை இப்போது இல்லை, என்னதான் அவரது சிறப்பு என்று
எங்களுக்கும் சொல்லுங்களேன் என்று ரசித்துக்கேட்கிறார்கள். தமிழின் அரிய
கதைகளை ஞான் மலையாளத்தில் அறிமுகப்படுத்தும்போது , திறந்த மனதோடு
ஆர்வத்தோடு ரசிக்கிறார்கள்.தமிழில் நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துமாறு
எனக்கு கடிதமனுப்புகிறார்கள். உன்னுடைய ஆனந்தாயி, நாவலை

ஞான் அறிமுகப்படுத்தியபோது கூட புதிய பார்வையோடு ரசித்தார்கள்.

கவர்ந்த எழுத்து என்றால் எம்.டி,யின் ரெண்டாம் முழம், ஆனந்தின் மறுபூமி
உண்டாகுன்னு, என்னை மிகவும் கவர்ந்த எழுத்து. இன்னும்
ஒ.ன்.வி.குருப்,ஆற்றூர் ரவிவர்மா, கவிதாயினி சுகதகுமாரி, வத்சலா,
அந்தர்ஜனம்,போன்றோரை குறிப்பிடலாம். கவிதைகளின் மரபுக்குட்பட்டும்,
மரபுகளை மீறியும் எழுதும் அய்யப்ப பணிக்கரையும் தவிர்க்க இயலாது.
modernism என்ற பெயரில் வறட்டுதனமில்லாத

ஆத்மாவின் ஜீவத்துடிப்பையே உலுக்கும் எழுத்துக்களை பட்டியலிடவேண்டுமாயின்
இன்னும் பலரையும் கூட எழுதலாம்.

சிவ---- சேச்சி, மலையாள இலக்கிய உலகில் ஜாதீய மனோபவம் உண்டா?

ஞான் -- தர்ம சங்கடமான கேள்வி சிவகாமி, ஞான் மனிதர்களை, மொழிகளை,
நேசிப்பவள் அம்மா, தயவுசெய்து இந்த கேள்வியை தவிர்க்கலாமே.

-------

ஞான் -----தமிழில் மிக உன்னதமான படைப்புக்கள் எல்லாம் வெளிவந்தும் அவை
சர்வதேச அங்கீகாரத்தை அடையாததற்கு காரணம்

தரமான மொழிபெயர்ப்பில் அவை பிற மொழிகளில் சென்றடையவில்லை என்று
நினைக்கிறேன். என்னம்மா சொல்கிறாய்?

சிவ---- உண்மைதான் சேச்சி, தமிழில் அதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட
இலக்கிய அமைப்புக்கள் முனைப்போடு செயல்படவேண்டும்,

, ------------------------------
---------

இதற்குப்பின்னர் பேசியதெல்லாம் அன்பின் வெளிப்பாட்டில், சக மனுஷியாய்
இலக்கியம் குடும்பம் சார்ந்த தகவலகளே.

விடைபெறுமுன் பரஸ்பரம் நன்றி கூறிப்பிரிந்தாலும் , சிவகாமியின்
எழுத்தைப்புரட்டும்போதெல்லாம் மனதில் நிற்பது, அழகான அந்த சிரிப்பே,
சிவகாமியின் துணிச்சல், சிவகாமியின், அழுத்தம், சிவகாமியின் னிறம், எல்லாமே கவர்கிறது.

பென்களின் பேனா இதுவரை என்ன சாதித்துள்ளது என்ற கேள்வியை யாரேனும்
எழுப்பினால் ,துணிகரமாக சிவகாமியின் நூலை

பரிந்துரை செய்வேன்,????------------------

[இப்போதைக்கு முற்றும், ---------- பின்னர் தொடரும்]

2 comments:

  1. இந்த உரையாடல்/நேர்காணல் எவ்விதப் பாசாங்குக்கும் இடமளிக்காமல் வெகு நேர்த்தியாயிட்டுண்டு அம்மே !
    ஜாதீய மநோபாவம் தொடர்ந்து பாரதீயர்களைப்
    பிரித்து வருவது க்லேசம் தருகிறது.
    அதற்கொரு மாற்று என்றுதான் தோன்றுமோ ?

    தேவ்

    ReplyDelete
  2. நன்றி அய்யா.
    ஜாதீய மனோபாவம் மாறவேண்டுமாயின், வேதமும் உபனிஷத்துமாய் வாழும் நிங்ஙள் போன்றோரின் பிரார்த்தனை ஒன்றுதான் வழி.
    ஊர்கூடி தேரிழுக்கும் நாள் என்று வருமோ.
    கமலம்

    ReplyDelete