Saturday, February 14, 2009

சிவகாமி -- பாகம் 2

கட்டுரை தொடர்ச்சி ...

ஒரு நாவலோ அல்லது சிறுகதையோ எழுதுவதற்கு, வெறும் கற்பனைவளமும் மொழிவளமும் மட்டுமே தெரிந்தால் போதும், இதோ ஞானும் கதை எழுதுகிறேன் பேர்வழி என்று மார்தட்டும் செப்புடு வித்தை தான் இலக்கியம் என்றோ, அல்லது கம்பிமேல் நடக்கும் திக்திக் சாதனையாக்கும் என்று மட்டும் யாரேனும் என்னிடம் அளந்தால் அவர்களை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டேன்.

இருட்டுக்கட்டிய கருவறையில் கண்களை இடுக்கிக்கொண்டு நோக்குங்கால், ஒரு நிமிஷம் ஒரே ஒரு நிமிஷம் ஈஷ்வர தரிஷனம் கிட்டியதும் பக்தன் சிலிர்த்து நிற்பானே, அந்த ஒரு நிமிஷம் போல் தரமான வாசகனும் நல்ல ஒரு கதையை படித்தது முடித்ததும் விக்கித்துப்போய் நிற்கவேண்டும். அதுதான் தரமான எழுத்து,கதை சொல்லும் உத்தியில் வாசகர்களிடையே ஒரு நெருக்கம் வேண்டும்.

அதற்கு இலக்கியத்தின்பால் மனித மனதிற்கு, மங்காத ஆவல், காதல் வேண்டும்.அந்த அதீத
தாகத்தோடு, மனித அனுபவத்தின் நாடித்துடிப்பை தேடிப்போய் ஒரு விஷயத்தை, மிகைப் படுத்தாமல் அதன் இயல்புக்கேற்ற உணர்வோடு எளிமையாக சொல்லத்தெரிந்தால் மட்டுமே
போதும் அந்தக்கதைக்கு அபார வெற்றியே. என்னைக்கேட்டால் எழுத்தாளனும் அடிப்படையில் ஒரு கலைஞனே என்பேன். எண்டெ எழுத்தில் இன்னும் தேடுதல் அடிநாதமாக ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது என்கிறார் ஆசிரியர், ந.முத்துசாமி.

ஆனால் கலைத்தன்மையையும் இயல்பான நடப்புக்களும் சூழ நிஜத்தன்மையின் நுணுக்கமான விவரங்களுடன் தர்க்கம், விவாதம் என்பதை வேகம் நிறைந்த உணர்ச்சிப்பெருக்குடன் எழுதும் படைப்புக்கள் என்னை பெரிதும் ஆகர்ஷித்துள்ளது, அப்படிப் படித்த கதைகளுள் ஆங்கிலேய நண்பனொருவனின் அனுபவத்தை தன்னுடைய எழுத்தில் கொண்டுவந்த இலக்கியவாதியின் கதையொன்று எண்டெ உள்ளம் கொள்ளை கொண்ட எழுத்து.

இந்த வகையில் பெண்களில் ப்ரதிபாராய், அனிதா நாயர், மார்கரெட் டீக், வி
ஜயம் அந்தர்ஜனம் ,ராஜம் க்ரிஷ்ணன், ரேகாக்ரிஷ்னன்குட்டி, அருந்ததிராய், சிவகாமி போன்றோர் இன்றியமையாதவர்கள். சிரியன் க்ரிஸ்டியன்களிடையே நிகழும் அவலம், தார்மீக அனுபவங்களை அருந்ததி எழுதியுள்ள விதரணை, இலக்கிய ஆளுமையில் உச்சம்
என்பதை மனதார பாராட்ட வேண்டும்.

நம் சிவகாமியின் எழுத்தும் , உறுத்தல் இல்லாத பாசாங்கற்ற, நடையால் பளபளவென்று துலங்கினாலும், நெருடும் ஒரே சமாச்சாரம் இவரது பச்சை, கொச்சையான வசனங்கள். சவடால் பேர்வழி காத்தமுத்துவுக்கு முதலில் வரும் ஒரே வசவு, தலைமுடி பாஷைதான்,

நீயெல்லாம் எப்படிரா பெண்டாட்டியோடு -----என்று காதுபொத்தும் வசனங்களை தவிர்த்தி
ருக்கலாம்.

ஆனாலும் சுவாரஸ்யமான விஷயங்களும் உண்டு. இவரது நாவலில் கணவர் மனைவியை எப்படி அழைக்கிறார் தெரியுமா? 'ஏம்பேசலை, ஏம்பேசலை' என்று?----

மனைவியோ, கணவரை, 'எக்கலை, எக்கலை' , என்பாராம் ? இப்படிக்கூட தமிழில் விளியுண்டா?

அடுத்து சிறுவழிபாட்டு தெய்வங்கள் என்றாலே, முனியாண்டி,முனீஸ்வரன் காளி,சூலி இப்படித்தானே படித்திருக்கிறோம்? ஆனால் சிவகாமியின் சாமி,' பொன்னுசாமி, எமபாரி,. இப்படி, இன்னும் திருமணம் நடத்திவைக்க வரும் அய்யரைப்பார்த்து கெளரி 'இவரு நிசமாலுமே அயிருதானாம்மா?

என்றுகேட்க, 'அக்காம், வள்ளுவரு, கோமேதகம் அயிரு,,என்பதும் அந்த வள்ளுவப்பண்டாரத்திடம் நிற்கப்போன அழுக்குச்சிறுமியை,

போ அந்தாலே , அயிருகிட்டே தீட்டாக்கிடாதே, என்று விரட்டுவதுமாக, என பல புதுபுதுத்
தகவல்களாய்,சிவகாமி அசத்துகிறார்.

பழையன் கழிதலும், ஆனந்தாயி, குறுக்குவெட்டு, நாளும் தொடரும், என சிவகாமியின் எல்லா நூல்களையுமே படிக்கும்போது, தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களின் ப்ரச்சினைகளை, பெண்மையின் அருமை, அநியாயமாக சுரண்டுப்படும் அவலத்தை, எந்த எழுத்து ஜாலமுமேயின்றி, இவ்வளவு இயல்பாக எழுதிய பாங்கே தமிழ் நாவல் உலகுக்கு புதிய பரிமாணம் என்று அறுதியிட்டுக்கூறலாம், இனி சிவகாமியின் பேட்டியை தொடருங்கள்.

-------------------------------------------------------------------------------------

கேள்வி------பெண்ணீயம் என்பது பற்றி தெரிந்தால் மட்டுமே ஒரு பெண்ணின் எழுத்து
நிலைக்குமா ?

சிவ-- அப்படி ஒரேயடியாகக் கூறிவிடமுடியாது. சுயசிந்தனை, தெளிவான பார்வை
இருக்கவேண்டுமென்று வேண்டுமானால் சொல்வேன்.

கேள்வி--சிறுகதை, நாவலில் மட்டுமல்ல, கலைத்துறையிலும் ஈடுபட்டுள்ளீர்கள். நாடகத்துறையில் வணக்கத்திற்குரிய எண்டெ ஆசிரியர் prof.ராமானுஜம், ந.முத்துசாமி, போன்றோரை போய் பார்ப்பதுண்டா?

சிவ----பண்டிதர்களின் பார்வையில் நாங்கள் நாடகம் போடுவதில்லை, கொட்டும் மோளமும் எங்கள் இனத்திலிருந்து தான் போனதே, அதை எங்கள் பார்வையில் எங்கள் பாணியில் , நாங்கள் தயாரித்துவருகிறோம்,அதனால்,--------
-


[தொடரும்]

No comments:

Post a Comment