Friday, January 9, 2009

சிறுகதை - - ஞயம் பட உரை

[ஞயம் பட உரை]

தமிழில் சிங்கை வானொலியில் ஒலிபரப்பாகவும், சிங்கப்பூர் எழுத்தாளர் கழக வெள்ளிவிழா சிறப்பிதழிலும் ,மலையாளத்தில் கேரளப்பல்கலையில் comparative story writing எனும் அங்கீகாரத்திலும் பிரசுரமான சிறுகதை,]

எழுத்து------------கமலாதேவிஅரவிந்தன்.
சிறுகதை ---'---- 'ஞயம் பட உரை''



கிருஷ்ணன்குட்டிக்குத் தலைவலித்தது. உடம்பு பிழிந்த துணியாய் துவண்டு கிடந்தது. கடந்த 15 நாட்களாக மானாட்டுக்கான ஏற்பாடுகளுக்கும், விழாவுக்கான பொறுப்புக்களுக்காகவும் அலைந்த அலைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல. மற்றவர்கள் பொறுப்பைப்பகிர்ந்து கொண்டாலும் , தலைமைப்பொறுப்பு மட்டும் எப்பொழுதுமே க் கிருஷ்ணன்குட்டியின் தலையில் தான் விழும். அதுதான் ஏற்பாட்டுக்கமிட்டியின் அன்புக்கட்டளை.

விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல், , கிருஷ்ணன்குட்டி ஏற்றுக்கொண்டானேயொழிய இலக்கியம் என்றாலே மனசு கசந்து வழிந்தது
மானாடு என்றாலே பற்றிக்கொண்டு வருகிறது.முந்தைய சில ஆண்டுகளின் அனுபவத்தால், இந்த மானாட்டில் கட்டுரை படைக்கமுடியாது, என பிடிவாதமாய் மறுத்துவிட்டான்..எத்தனையோபேர் வற்புறுத்தியும் கிருஷ்ணன்குட்டி இந்த விஷயத்தில் மட்டும் மூர்க்கமாய் மறுத்துவிட்டான்.

பின் என்ன? போயும் போயும் சிங்கப்பூருக்குவரும் விருந்தாளிடகளிடமா சந்தனக்காப்பு?
கட்டுரையாளர்கள் எல்லோருமே வந்துவிட்டார்கள் என்ற சேதி அறிந்தும் கிருஷ்ணன்குட்டி அலட்டிக்கொள்ளவில்லை.. அதிலும் ஜெயதேவ் சிங்கை வந்திருக்கிறார் என்றவுடனேயே பலரும் காணச்சென்றிருந்தனர். ஜெயதேவ் முற்போக்கு எழுத்தாளன்.கேரளத்தில் பலரின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளான சினிமாக்கதாசிரியன்.. நாடகத்துறையிலிருந்து சினிமாவுக்குப்போனவன் என்றாலும் ஜெயதேவின்

சினிமா அண்மையில் விருது பெற்றிருந்தது. ஜெயதேவின் சினிமா ஸ்பெஷல் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் பலரும் தூங்கிவழிந்து கொட்டாவியோடுதான் வெளியே போவார்கள். விஷயம் வேறொன்றுமில்லை. இருட்டும் மெளனமும் ஊமை நயனங்களும் திடீரெனக்கதானாயகியின் தற்கொலையுமாய் படம் முடியும்போது மிகப்பெரிய மேதைகளுக்கல்லாது, யாருக்குமே எதுவுமே புரியாது.

ஞான் சினிமா எடுப்பது பாமரர்களுக்காக அல்ல. அறிவுஜீவிகள் என்னைப்புரிந்து கொண்டால் போதும்' என்று பெருமையாய் பேட்டி கொடுக்கும் ஜெயதேவ்தான் இவ்வாண்டு மானாட்டின் முக்கிய ஆய்வாளன்..நாடாகாசிரியர்கள், நாவலாசிரியர்கள், நாட்டியமணிகள்,
இசையில் புதிய முத்திரை பதித்தவர்கள், சினிமாவில் சாதனை படைத்தோர்கள், எனப்பல துறையிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட முக்கியமானவர்களே இந்த மானாட்டில் தெறிவு செய்யப்பட்டதால், நிகழ்ச்சி சோடைபோகாது என கிருஷ்ணன்குட்டி நம்பினான்.
முதல்னாளே மானாட்டரங்கம் நிரம்பிவழிந்தது..வழக்கமான தொடக்கம். வழக்கமான, நிகழ்ச்சினிரல், என முதல் நாள் முடிந்தது.

மறு நாள் காலையில்தான், கிருஷ்ணன்குட்டிக்கு மற்ற ஆய்வாளர்களிம் கதைக்கவே முடிந்தது, எதிர்பார்த்த தகவல்தான், எத்தனை ஆண்டுகளாக இலக்கியபூசல்களையும் காழ்ப்புணர்வையும் வேதனையோடு தரிசித்தவன்,. .இந்த முறையும் சிரிப்புத்தான் வந்தது.
கதகளியில் சாதனை புரிந்த அப்புவாரியர், நவீன நாடகாசிரியர் பேபிகுட்டன்,மோகினியாட்டத்தின் பாருக்குட்டி, ஏகாங்க எழுத்தாளர் தங்கச்சன், என ஒவ்வொருவரும் மாறி மாறி, வாசித்த குற்றச்சாட்டுக்குப்பிறகு , ஜெயதேவ் உண்மையிலேயே சுவாரஸ்யமான கேரக்டரோ,என்று நினைக்கும் போதே, புன்முறுவல் தான் வந்தது.

பிறகுதான் கிருஷ்ணன்குட்டி கவனித்தான், நிகழ்ச்சிக்கு வந்த கட்டுரையாளர்கள் யாருடனும் ஜெயதேவ் பேசவேயில்லை. வலியச்சென்று பேசவும் யாரும் அணுகவுமில்லை.. வாயில் சூயிங்காமை அதக்கியவாறு, அழைத்துவந்த ஒரு பெண்ணோடு அமர்ந்து நிகழ்ச்சியை கவனித்தான். அந்தபெண் அவனோடு சேர்ந்து வாழும் பெண் என்றனர் சிலர். இல்லை இந்த நிகழ்ச்சிக்காக மட்டுமே சேர்ந்து கொண்ட அவனுடைய சகா என்றனர் வேறு சிலர். வேடிக்கை என்னவென்றால் மதியம் உணவின்போது கூட ஒரு மூலையில் அமர்ந்து தன் தோழியோடு சாப்பிட்ட்டுக்கொண்டிருந்தானேயொழிய, தன் உலகிலிருது அவன் விடுபடவே இல்லை.
அப்படியும் கிரிஷ்ணன்குட்டிக்கு ஜெயதேவிடம் பேசத்தோன்றவில்லை. தோதுப்படவும் இல்லை. ஆயிரம் பொறுப்புக்களில் அமிழ்ந்து போயிருந்தான்.மூன்ராம் நாள் மானாட்டில் ஜெயதேவின் பங்களிப்பு. எதிர் பார்த்தாற்போலவே கூட்டம் நிரம்பிவழிந்தது. ஒருசிலரோ
என்னதான் வெட்டிமுறிக்கப்போகிறான் என்றுதான் பார்ப்போமே என வெளிப்படையாகவே முணுமுணுத்தனர். ஆனால். கணீரென்ற குரலில் தொடங்கிய உரையை லய பாவ தாளத்தோடு விஷய ஞானபூர்வமாய் மிக அற்புதமாய் முடித்து வைத்தவன் ஜெயதேவ் மட்டுமே. கரகோஷம் அரங்கில் அதிர்ந்தது..பலரும் ஆர்வத்தோடு, ஜெயதேவிடம் சென்று பேசுவதைக் காணமுடிந்தது.. பிறகட்டுரையாளர்களை அப்பொழுதும்
ஜெயதேவ் மதிக்கவில்லை.

தன்னைதேடிவந்து பேசுபவர்களிடம் மட்டுமே பேசினான். தன்னோடு வந்த மற்ற கட்டுரையாளர்கள் யாருக்குமே இல்லாத ரசிகர்கூட்டம் தனக்குமட்டுமே இருக்கிறது எனும் அகந்தையை அப்பட்டமாய் தன் செயல்களில் காட்டினான். மதிய உணவுக்காக அனைவரும் எழுந்தபோது ஜெயதேவ் க்ரிஷ்ணன்குட்டியை தேடிவந்தது ஆச்சர்யமாக இருந்தது. கிருஷ்ணன்குட்டி வியப்பைக்காட்டாமலே கைகூப்பியபோது ,அந்த மரியாதை கூட தெரியாதவனாய் ,நேரடியாகவே விஷயத்துக்கு வந்தான்.

' ஞான் எதிர்பார்க்கவேயில்லை. இவ்வளவு ஆர்வமுள்ளவர்கள் சிங்கப்பூரிலிருப்பார்கள் என்று. பண்பலம் படைபலம், எல்லாமே இருந்தும் திறமையான படைப்பாளிகளை ஏன் உருவாக்கமுடியவில்லை? ஆண்டுக்கு ஒருமுறையாவது எங்களைப் போன்றோரை வரவழைத்து இங்கு workshop,பட்டறைகள், பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்யலாமே? இத்தனைக்கும் செல்வம் கொழிக்கும் ஊராயிற்றே சிங்கப்பூர்'' ,
என்று ஜெயதேவ் அடுக்கிக் கொண்டேபோக க்ரிஷ்ணன்குட்டிக்கு ஒருபக்கம் சிரிப்பும், மறுபக்கம் வழக்கமான எரிச்சலும் போட்டிபோட்டுக்கொண்டு வந்தது.
பேசிமுடிக்கட்டும் எனப்பொறுமையாய் காத்திருந்தான். ' ஊரில் உங்கள் தொழில் என்ன? என்று மிகப் பொறுமையாஇ கேட்டான் கிரிஷ்ணன்குட்டி.

'ஞான் டைரக்டர், ஞான் நவீனன், ஞான் புதுமைப்படைப்பாளன், சினிமா உலகில் இன்றைய எதிர்பார்ப்பே ஞான் தான் ' என ஜெயதேவ், ஞான், ஞான் என அழுத்தம் கொடுத்தம் கொடுத்த ஆணவத்தில் கிரிஷ்ணன்குட்டியின் பொறுமை பறிபோயிற்று.
[ தொடரும்]

No comments:

Post a Comment