Saturday, May 30, 2009

கூத்துப்பட்டறையில் - - 11 லாலாக்கடை அல்வா -- மல்லிப்பூ

லாலாக்கடை அல்வா--மல்லிப்பூ


தோழிகள் இப்படிக்கலகலத்துக் கொண்டிருக்க, எதிரே Dr.ராஜமாணிக்கமும் கிள்ளிவளவனும் வர, கீதா எழுந்து நிற்க , அனைவருமே கைகூப்பினோம். [ராஜமாணிக்கம் கீதாஞ்சலியுடன் ஒரே கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்] . இவள் மனம் திறந்து பாராட்டினாள்,
”ஸார்,!இன்றைய நிகழ்விலேயே மிகச்சிறப்பாகப் பேசியவர் நிங்ஙள் தான். வெகு கனமான ஆழ்ந்த அவதானிப்பு சார்”என்று முடிக்கவில்லை. உடனே கிள்ளிவளவன் கேட்கிறார், நீங்ஙள் என்ன கேரளாவா? பளிச்சென்று இவள் பதில் கூறினாள்,” இல்லை தமிழ்ப்பெண், தமிழ்நாட்டில் தமிழர்கள் நிரம்பிய நிங்ஙளின் சபையில், தமிழ்க்கட்டுரையாளராக வந்துள்ள ஞானும் தமிழ்ப்பெண் தான் !.” மலர்ந்து சிரித்தார் ராஜமாணிக்கம். ”இந்த பெருமைக்காகவே பேசவேண்டுமே அம்மா,என்று சடாரென்று எதிரில் அமர்ந்துகொண்டு, கிள்ளிவளவனிடம் எல்லோருக்கும் காப்பிக்கு சொல்ல,இவள் மட்டும் மறுத்துவிட்டாள்.
பூஜை முடிந்துவிட்டது.இனி ஜலபானம் கூட நாளைக் காலைதான். அதுகூட காப்பி அல்ல.
சாய-- சாய மட்டுமே இவளது சாய்ஸ்.. பிறகு ஏன் சிரமம்?

ஞான் --ஸார்! தமிழில் நிறைய சம்சயங்கள் உண்டு. தமிழறிஞர் நிங்ஙளிடம் கேட்கலாமா?
முனைவர்---தாராளமாகக் கேளுங்கள் அம்மா. எனக்குத் தெரிந்தவரை சொல்கிறேன்.
ஞான் --- மலையாள இலக்கண நூலான ”லீலா திலகம் ”கூறும் இலக்கணவரம்பும், தமிழில் காணப்படும் இலக்கணக்கூறுகளும், முற்றும் முரண்பாடாகவே உள்ளது.தெலுங்கு ஆந்திர பாஷா பூஷணம்,”கன்னட இலக்கண நூலான சப்தமணி தர்ப்பணம்,என எல்லா மொழிபெயர்ப்புகளுமே வாசித்திருக்கிறேன்.எல்லாமே அழகான விளக்கங்கள்தானே? பின் இலக்கணம் மட்டும் ஏனிப்படி? திராவிடவகுப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம்,
மலையாளம், ஆகிய நான்குமொழிகளிலும்,தமிழ் மட்டுமே ஆர்யத்தின் ,உதவியின்றி,தனித்தியங்குகிறதாம்? இது எப்படி என்று விளக்க முடியுமா சார்? மொழியை பாதுகாக்கிறேன் என்று ஓர், இரும்புச்சட்டையப்போல் இறுக்கி நெருக்கலாமா? சார்?

முனைவர்---தமிழோடு ஆர்யம் கலக்கத்தொடங்கிய காலத்திலேயே, இலக்கண ஆசிரியர்கள் தமிழுக்கு வரம்பு கட்டிவிட்டார்கள் அம்மா.பிறமொழிச்சொற்கள் தமிழில் வழங்கலாகாது, என்று தமிழ் இலக்கணம் தடை செய்யவில்லை.ஏனைய மொழிகளில் இல்லாத இலக்கணமொன்று தமிழில் உண்டு.அதுதான் அகப்பொருள், புறப்பொருள் இலக்கணம்,.பிறமொழிச்சொற்கள்,தமிழோடு கலந்து கொள்ளவேண்டுமாயின் அவை,தமிழ் ஓசையும், உருவமும் உடையனவாய், வரல் வேண்டுமென்பதை தமிழ் உலகம் ஏற்றுக்கொண்டதுதான் உண்மை. ஞான் --வடமொழிக்கு வியாகரணம்எழுதிய பாணிணியும், தமிழ்மொழிக்கு இலக்கணம் வகுத்த அகத்தியரும், ஒருவருக்கொருவர் நிகர் என்றுதானே அருட்சோதிமுனைவர் கூறுகிறார். திராவிடமொழி நூலின் தந்தையாகப்போற்றப்படும், " A comparative grammer of the dravidian family of languages"
எழுதிய கோல்ட்வெல்லின், ஒப்பிலக்கணத்தில்,கூட ஆர்யத்தையும் தமிழையும் ஒப்பீட்டு நோக்குங்கால் உள்ள ஒற்றுமையை, அருமையாக விளக்கியுள்ளாரே?அதெல்லாம் தப்பா சார்?

முனைவர்-- தவறில்லை அம்மா, எந்த மொழியுமே மட்டமில்லை !எல்லா மொழிகட்குமே அதனதன் அழகுண்டு அம்மா.!ஆனால் தமிழில் நிரம்ப சிறப்பெழுத்துக்கள் உண்டு..அதைத்தான் ஒப்பிலக்கணத்தில் அறிஞர்கள் சிறப்பாகக் கூறுகிறார்கள்.இது எல்லாவற்றையும் விட தமிழ் இலக்கணம் , மற்ற திராவிடமொழிகளைப்போல், இடைக்காலத்தில் எழுதப்பட்டது அல்ல.

ஞான் -- ஏற்றுக்கொள்கிறேன் சார், ஆனால் மிக முக்கிய சம்சயம் என்னவென்றால், ஆய்வாளர்களின் கூற்றிலிருந்து ,கல்வெட்டுக்களில் கிட்டிய தகவல் முற்றிலும் மாறுபட்டுள்ளதே. உதாகரணத்துக்கு,தொல்காப்பியம் 3000 ஆண்டுகட்கு முந்தையது என்கின்றனர் ஆய்வாளர்கள். கல்வெட்டுக்களும் செப்பேடுகளும்,
2000 ஆண்டுகட்கு முந்தையது தொல்காப்பியம் என்கிறது. ஆனால், தொல்காப்பியத்துக்கு முற்பட்ட இலக்கணம் ஒன்று அகத்திய முனிவரால், இயற்றப்பட்டிருந்ததென்று ”கர்ண பரம்பரை’ செப்பேடு கூறுகிறதே. தமிழிலக்கண ஆசிரியரான பவணந்திமுனிவர் எனும் சான்றோரும் , இதை ஆமோதிக்கிறாரே?

[ராம.கி. அய்யா.அவர்கள் இக்கட்டுரையைப்படிப்பவராயின் விளக்கம் தரலாம்] எது உண்மை என்று விளக்க முடியுமா சார்? முனைவர் ராஜ மாணிக்கம் விளக்கினார். இவளின் எந்தக்கருத்தையுமே ஆட்சேபிக்கவில்லை. மிக்க அன்போடு உரையாடினார்.
[இன்னும் பெரிய புராணம், திருமுறைச்சான்றோர்கள், பெளத்தகாப்பியம், வால்மீகி ராமாயணம் பற்றியெல்லாம் கேட்க நினைத்தும்நேரமாகிவிட்டதால் முடியவில்லை,] சான்றோர் ஒருவரோடு சம்பாஷித்த நிறைவு கிட்டியது.

அவர்கள் புறப்பட்ட கையோடு இவளும் எழ தோழிகள் விடவில்லை.உடல் களைப்பில் கெஞ்சியது. நாளைக்காலை முதல் நிகழ்விலேயே இவளது உரை.கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்கவில்லை.ஆனாலும் தோழிகளின்அன்புதான் வென்றது. ரொம்ப நாட்களாகவே இவளுக்கிருந்த ஒரு சம்சயம், தோழிகளிடம் கேட்டாள்.தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் பலரின் கதைகளிலும் படித்திருக்கிறாள். ”லாலாக்கடை அல்வா, மல்லிப்பூ “கொடுத்தால் போதும் .மனைவிமார்கள் சமரசமாகிவிடுவார்கள் என்றெழுதுகிறார்களே?
அது என்ன லாலாக்கடைஅல்வா? மல்லிப்பூ?வில் மறைந்து கிடக்கும் ரஹஸ்யம்என்ன?ஏன் மற்ற பூக்கள் கொடுத்தால் காதல் வராதா? என்றிவள் கேட்டதுதான் தாமதம்.
சொல்லிவைத்தாற்போல் அப்படியே வெட்கத்தில் குப்பென்று பெண்கள் முகம் நாண, ”ஓஹோ, அப்படியென்ன சிதம்பர ரஹஸ்யம் ?என்றிவளுக்கு உற்சாகம் பிறந்துவிட்டது.
”பொன்னுத்தாயிதான் நம்ம குழுவிலேயே சிறிசு, பொன்னியிடமே கேள் கமலா, ”
என்று மங்கையர்க்கரசி எடுத்துக்கொடுக்க, பொன்னியின் வெட்கம் காணவேண்டுமே?
அதொண்ணுமில்லை,கமலாக்கா, -------என்று விளக்க விளக்க, இவளுக்கே வெட்கமாகப் போய்விட்டது.

ஒஹோ, இதில் இவ்வளவு விஷயம் உண்டா? அன்னபூரணி விடவில்லை.எங்களையெல்லாம் கேட்டாயே, உன் சேதி என்ன?என்றிட எப்படியோ,
எதையோ சொல்லி சமாளித்து, அறைக்குள் திரும்பி, கட்டிலில் விழுந்த அடுத்தகணமே , அலுப்பில் தூங்கிப்போனாள். பொலபொலவென்று பொழுது புலரும் முன்னே, குளித்து, தொழுது, நாமம் சொல்லி,,உடுத்தி, சகலமும் முடித்துக்கொண்டு ,
முதல் வேளையாக கணவருக்கு போன் செய்ததும் , சிரிப்பை அடக்கிக்கொண்டு, இவள் கேட்ட முதல் கேள்வி, மணமாகி இத்தனை வருஷமாச்சே, ஒருநாளாவது லாலாக்கடை அல்வா, மல்லிப்பூ வாங்கி தந்திருக்கிறீர்களா? வாட்? என்று கணவர் புரியாமல்அதிர , இவள் விளக்க, கணவர் வாயாரத் திட்ட, இவள் வாய் நிறைய சிரித்தாள்.
இன்னும் 2 நாள்தானே? சிங்கப்பூருக்கு வந்த பிறகு இந்த வசனம் பேசுவாயா என்று பார்க்கிறேன், "என்றிட்ட கணவரின் கிண்ணாரத்தில் மனசெல்லாம் மகிழ்வில் மிதக்க, மாநாட்டு அரங்கினுள் நுழைய ,தோழிகள் வந்து சேர்ந்து கொண்டார்கள்.
புஷ்பவனம் குப்புசாமியின் அற்புதமான இசைக்கச்சேரியில் மங்களகரமாய் தொடங்கியது நிகழ்ச்சி,

.......தொடரும்

No comments:

Post a Comment