Sunday, January 11, 2009

நிகழ்வுகள் - ஸ்த்ரீ

[ஸ்த்ரீ]


இப்படியொரு தர்ம சங்கடத்தை இவள் எதிர்பார்க்கவே இல்லை.இரண்டு எதிரிகள் ஒரே நேரத்தில் சந்தித்துக் கொள்வதுதான் விதியின் சதியா?இந்த ஜென்மத்தில் யாரை ஸ்வப்னத்தில் கூட பார்க்கக்கூடாது என்றெண்ணியிருந்தாளோ,சாக்‌ஷாத் அதே எதிரியும்,இவளும்ஒரே களத்தில் நிற்க வேண்டிய நிர்ப்பந்தத்தை என்னென்று சொல்ல.

4 ஆண்டுகட்கு முன்பு ஸ்த்ரீ, என்ற தலைப்பில் வெளிவந்த நாவலைப்பற்றி, சொல்ல வேண்டிய அவசியமல்ல.
அவ்வளவு பிரசித்தி பெற்ற நாவலா என்று கேட்டால்,, ஊஹூம், இல்லை, என்றும் சொல்லமுடியாது.ஆம் என்றும் சொல்லமுடியாது.
ஆனால் கீர்த்தி பெற்றது கண்டனத்தில் என்றுமட்டும் உறுதியாக விளம்பிடலாம்.
இந்த நாவலைப்படித்த பெண்களில் யாருக்கெல்லாம் சண்டாளமாய் கோபம் வந்ததோ தெரியாது,
ஆனால்,இவளுக்கு பொளிந்து கொண்டுவந்தது, பதறிக்கொண்டு வந்தது கோபம்.அப்படிப்பட்ட வக்கிரம், பச்சை,கொச்சையாய், பெண்களைத்திட்டி,
பெண்கள் என்றாலே போகம், பெண் என்றாலேஆண்மயக்கி, பெண் என்றாலே, ----வேண்டாம், எழுத முடியவில்லை.
அவ்வளவு மோசமாக பெண்களைப்பற்றி எழுதப்பட்டிருந்த நாவல். நூல் வெளி வந்த கட்டத்தில் மிகக் கடுமையாக, இவள் ஸ்த்ரீ நாவலை
கண்டித்து விமரசனம் எழுதியிருந்தாள்.அந்த விமர்சனம் கேரளத்தின் குறிப்பிட்ட பத்திரிக்கையில் வெளிவந்திருந்தது
இலக்கியம் படைத்தல் ஒன்றும் லேசு பாசு அல்ல,
அது தவம்,யாகம், என்றெல்லாம் இவளும் மெய்ம்மறந்து வசனம் பேசிய காலம் ஒன்றுண்டு, ஆனால் ஸ்த்ரீ நவலைப்படித்தபிறகு ஏனோ பேனா
பிடிக்கவே வெறுத்துப் போயிற்று. இப்படிக்கூட ஒரு ஆண்மகன் எழுதுவாரா? நினைக்க நினைக்க நெஞ்சு கொதித்தது.உடலம் நடுங்கியது. ஏனோ
கணவரைப் பற்றிக்கொண்டு அழவேண்டும் போல் அப்படி துக்கம் துக்கமாய் வந்தது.
ஏனிந்த நீஜம்?எங்கே கோளாறு? யாரிந்த எழுத்தாளர்?
சுய காழ்ப்புணர்வை அடகு வைக்கவா இலக்கியம்?எந்தப்பெண் இப்படி எழுத வைத்தாள்? அப்படியே எவளாவது ஏமாற்றி
யிருந்தாலும் அவளைத்தானே திட்டவேண்டும்?அதைவிடுத்து ஒட்டுமொத்த ஸ்த்ரீ வர்க்கத்தையும் திட்டுவதென்றால் இது என்ன அடாவடித்தனம்?
பெண்ணிலிருந்து பிறந்து, பெண்ணுடனே வாழ்ந்தும் பெண்மையை இழிவாகப் பேசுவதென்றால், --------
பெயரைப்பார், ஆகாஷாம். -------ஹ்ம்ம்---
நவீன நாடகாசிரியராக பட்டறைக்குள் நுழைந்த Dr. ஆகாஷைப் பார்த்தபோது,கிட்டிய அதிர்ச்சி எதிர்பாராதது.
இவள் கற்பனை செய்து வைத்திருந்தது ,உழுதமுகமும், நீண்ட தாடியும், கஞ்சாக்கண்களுமாய், அலட்சியமான ஒரு முகத்தை.
ஆனால் சந்தித்ததோ சிரிக்கச் சிரிக்கப் பேசும் சாந்தமே உருவான முகத்தோற்றம் கொண்ட ஒருவரை.
பொல்லென்று வெளுத்த தலைமுடி.உயரமும் பருமனுமாய் ஆஜானுபாகுவான தோற்றம்.
ஆனால் அமெரிக்க ஆங்கிலம் கமழ,சகலருக்கும் கை கொடுக்க ஆகாஷ் வந்தபோது, இவளால் எங்குமே ஓட முடியவில்லை.
இவள் முறை வந்தபோது நமஸ்காரம் என்று மட்டும் கைகூப்பிவிட்டு, பட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு,
விடு விடுவென்று நடந்துபோய் கல்யாணிக்குட்டியோடு பேசத்தொடங்கிவிட்டாள்.
பின் என்ன? பெண்களைத் திட்டுபவரோடு மனுஷி பேசுவாளா?
அதுவும் ஒரு எதிரியோடு?
அடுத்த 2 மணி நேரத்தில் மீண்டும் இருவருமே முகத்தோடு முகம் சந்திக்க வேண்டிய கொடும்விதி
கவிதை, சிறுகதை, நாடகம், நாவல்.,என அனைத்துக்கூறுகளையுமே அலசும் நிகழ்வு.
எல்லோரும் அவரவர் அனுபவங்களையும் பேசிட ஆகாஷ் வாயைத் திறக்கவில்லை. 4 மொழிகளில் இவளைக்கவர்ந்த சிறுகதைகளை இவள்
அறிமுகப்படுத்தினாள்
கேள்விமழையால் வாசகர்கள் துளைத்தெடுக்க,மேனன் ஏட்டனின் குரல் ஓங்க, கல்யாணிக்குட்டி சிரித்து பதில் கொடுக்க, ஜேக்கப் ஸார்,
தர்க்கிக்க, குஷியோடு மேகா விளக்க, வர்மாஜி இடையில் ஏதோ பேச , வாசகர்கள் விடவில்லை. மகிழ்ச்சியாக இருந்தது. ஒன்று மட்டும் புரிந்தது.
வாசகர்கள் அபாரமாய் வளர்ந்துள்ளார்கள்.இலக்கியம் என்ற பெயரில் எந்த தகிடுதத்தமும் இவர்களிடம் பலிக்கவில்லை.
நவீனத்துவம் , பின் நவீனத்துவம் , இதுதான் மறுனாளைய முக்கிய நிகழ்வு. Drஆகாஷின் பட்டறை. சிரமப்பட்டு சலனமில்லாத முகத்தோடு
போய் அமர்ந்தாள்.
new wave, என்டெ ஈஷ்வரன்மாரே,னவீன நாடகமென்றாலே ஒவ்வொருவருமே அவரவர் பாணியில் அடூர் கோபாலகிருஷ்ணன் தானே?
காத்திருந்த நிமிஷம் வந்தது. எழுந்தாள், கேட்டாள்.
நிங்ஙளின் இன்றைய theatre exprerimentalலில் ஒரு பெண்ணின் சாயல் கூட இல்லையே?ஏன் பெண்களைப்பற்றி நாவல் மட்டும் தான் எழுதுவீர்களா?
நிகழ்வில் காட்ட முடியாதோ?

ஆகாஷ் அப்படியே திகைத்துப்போய் தடுமாறவில்லை. [அங்கும் ஏமாற்றம்] மாறாக இவளைப் பார்த்து புன்னகை மலர சிரித்தார்..
ஒரு நிமிடம் நிதானித்தார்.பிறகு கூறினார்.
"என்டெ ஸ்த்ரீ நாவலை கிழி கிழியென்று கிழித்தீர்களே? அதனால் நிங்ஙளைக் கண்டு எனக்குப் பயம்."
என்றிட ,அந்தக் கேலியில் பொதிந்திருந்த எள்ளலை இவளால் மன்னிக்கவே முடியவில்லை. சிலிர்த்துப்போய் பதிலடி கொடுக்க எழ முயன்றபோது, இப்பொழுது ஞான் அரங்கேற்றியது, dynamics of acting in verbal communications'
இவள் விடவில்லை. ஏன் verbal நிகழ்வைக்கூட, silent talk ல் தான் காட்டவேண்டுமா?
இதுதான் என்டெ பாணி,என்று அழுத்தம் திருத்தமாய் ஆகாஷ் பதில் தர அதற்கு மேல் இவளால் எகிற முடியவில்லை.
பின்னரும் வழக்கமான நிகழ்ச்சி நிரல், என்று எப்படியோ 7 நாட்கள் கடந்தது.
கல்யாணிக்குட்டி, சுரேஷ் ஏட்டன், வர்மாஜி, மாலதி நாயர்,மேகா, ஆனந்தவல்லினம்பீசன், என எல்லோருமே அவரவர் நாட்டுக்குத் திரும்பிபோகும்
நாள் .பிரியாவிடைவிருந்து அன்று ஆகாஷ் ஸ்த்ரீ நாவலைப்பற்றிய சர்ச்சைக்கு சம்மதித்தாராம்.
இனி ஸ்த்ரீ நாவல் சுருக்கம் பார்ப்போமா?

சாமூத்ரி[உயர்குலத்தைச் ]சேர்ந்த விஜயமும் , அதக்ருதவர்க்கத்ததைச்[ புலையக்க்குடி] சேர்ந்த முத்தப்புனும் டெல்லிப் பல்கலைக்கழகத்தில்,
ஈருடலும் ஓருயிருமாய் காதலித்தார்கள்.ஆனால் விஜயத்தின் வயிற்றில் முத்தப்பனின் கரு உண்டானதும், மும்பாயில் உறவினர்வீட்டில் போய் தங்கியிருக்கச்செய்து , பிரசவித்த குழந்தையை, கிரித்தவ மடத்தில் விட்டுவிட்டு,மகளை அழைத்துச் செல்கின்றனர் பெற்றோர்
படிப்பும் வசதியும் நிரம்பிய நம்பூதிரிக்கு மனைவியாகி , மதிப்புமிகு அந்த்ர்ஜனமாய் விஜயம் நடமாடுகிறாள்.
எதேச்சையாக ஒரு நாள் சந்தித்த கல்லூரித்தோழன் குஞ்ஞு குட்டன் மூலம் விவரமறிந்த முத்தப்பன் , குழந்தையை தக்க சான்றுகளோடு
சென்று நிரூபித்து, குழந்தையைக் கொண்டு வந்து வளர்க்கிறான்.முத்தப்பன் ஜாதியில் புலையனாயிருந்தாலும், உயரிய கல்வித்தகுதி யால்
சமுதாயத்தில் பெரிய பதவியிலிருக்கிறான்.ஆனாலும் இறுதிவரை திருமணமே செய்யவில்லை.
மகன் கிருஷ்ணப்பிரசாத் வளர்ந்து, பெரியவனாகி, விவரமறிந்து,, ஒரு நாள் தாயைக் காணச்செல்ல,அங்கே விதவைத்தாய்,
நோயாளியாகி,கிழடு தட்டி, குழந்தைப்பேறே இல்லாமல், கணவரையும் பறிகொடுத்தனிலையில்,னிற்கும் பரிதவிப்பு கண்டு, தன்னோடு வந்து விடுமாறு
கேட்க,கண்ணீரோடு முடியாது என்று மறுத்துவிடுகிறாள்.
என்டெ சமுதாயம், என்டெ காலில் இட்ட விலங்கு இந்த வாழ்க்கை. உன்னோடு ஞான் வரமுடியாது. தயவுசெய்து நீ என்டெ மகன் என்று மட்டும் இங்கு யாரிடமும் சொல்லிவிடாதே, உடனே போய்விடு'என்று கைகூப்ப, வாசலுக்கு வந்த கிருஷ்ணப்பிரசாத் காறித்துப்புகிறான்.
பிறகுதான் அவனுடைய கிருஷ்ணலீலை தொடங்குகிறது.பார்க்கும் பெண்களில் படிபவள் என்று தெரிந்தாலே போதும், அப்படி அனுபவிக்கிறான்,
பெண்,பெண், பெண்,என அலுக்காமல் புரள்கிறான்..ஒரு கட்டத்துக்கு மேல் அந்த வாழ்க்கையும் சலிப்பூட்ட, பின் எவளையுமே பிடிக்கவில்லை.பெண் என்றாலே வெறுப்பு, பெண் என்றாலே குமட்டல்,பெண்களைக்கண்டாலேயே,---
இப்படிப்போகும் கதை, முடிவதும் இதே ரீதியில்,
சில வரிகளைப் படிக்கவே முடியவில்லை. அவ்வளவு அபத்தமாக சித்தரிக்கப்பட்டிருப்பார்கள்.
ஹூம்,ம்ம்
பிரியாவிடை விருந்து அன்று ஆகாஷின் நாவலைப் பற்றி க் கேட்க யாருக்குமே மனம் வரவில்லை.
தமிழ், மலையாளம், இந்தி, குஜராத்தி,லத்தீன், பிரெஞ்சு,எனப் பலமொழிகள் கற்ற ஆகாஷ் , இசையிலும் கஜல் அசலாகப் பாடக்கூடியவர்
நண்பர்கள் வற்புறுத்த அவர் பாடியபோது அதிலிருந்த சோகம் நெஞ்சைப் பிசைந்தது.
அதைவிட ஆச்சர்யம் சுத்த சைவம் அவர் என்று தெரிந்தபோது, நம்பவே முடியவில்லை.
அடைப்பிரதமனில், கதலிப்பழமும், பப்படமும் கூட்டி. ஒரு வட்டக்கப்பில், வார்த்து, சாப்பிட இவள் அமர்ந்தபோது,
2 ரொட்டித்துண்டுகளும், அவியல், தோரன், துணைபதார்த்தமாய், இவள் எதிரில் வந்தமர்ந்தார் ஆகாஷ்.
கமலம்,
இங்கு வந்த அன்றே என்டெ நாவலை விமர்சித்தவர் நிங்ஙள் தான் என்று எனக்குத்தெரியும்,விமர்சனம் வந்த காலகட்டத்தில் இதைவிட
மூர்த்தாண்யத்தையே ஞான் சந்தித்திருந்ததால் எனக்கு நிங்ஙளின் விமர்சனம் ஒன்றுமேயில்லை.ஆனால்
, இலக்கியம் என்பது, மல்ர்ப்பூக்களால் நெய்த சொகுசு மட்டும் அல்ல என்பதை நிங்ஙள் ஏற்க மறுக்கிறீர்களே, இதுதான் வருத்தம்.
ஆங்கிலத்தில் இப்படியொரு எழுத்து வந்தால் எதிப்பீர்களா? [ஆங்கில இலக்கிய ரசனையல்ல நம் இலக்கியப்பார்வை/என்பதை எப்படிச்சொல்ல.]
எண்டெ வலி, எண்டெ எரிச்சல்,எண்டெ கோபம்,எல்லாம் தான் ரெளத்ரமாக வெடித்தது அந்த நாவலில்'
அந்த நாவலில் வரும் கிருஷ்ணப்ரசாத் யாரென்று தெரியுமா?
இவளால் பேசவே முடியவில்லை. என்னால் யூகிக்கமுடிகிறது, எனும் போதே நா தழுதழுத்தது
கல்வி, தகுதி, எல்லாமே இருந்தும் எண்டெ தந்தையை ஒதுக்கிய காரணமென்ன?இந்த புரையோடிப்போன சமுதாயத்தின் ஜாதிவெறிதானே?
பெற்ற பையனையே ஏற்றுக்கொள்ள முடியாத அந்த ஜென்மத்தை, நலிந்து கிடந்த நிலையிலும் என்னை விரட்டியடித்தவளை
நீஜ வார்த்தைகளால் திட்டினால் என்ன? என்டெ அவமானத்துக்கு வேறு என்ன தான் வடிகால்? சொல்லுங்கள்?ஆகாஷ் பேசி நிறுத்தியபோது,
இவளுக்கு கண்கள் நிரம்பிவிட்டது.,
போகட்டும் அவரை மன்னித்து விடுங்கள் அம்மாதானே, என்று சொல்லக்கூட முடியவில்லை .
பிறகு ஆகாஷும் பேசவில்லை. மெளனமாகவே சாப்பிட்டு எழுந்தனர்.
விடைபெறும்போது கல்யாணிக்குட்டி ஆச்சர்யத்தோடு கேட்டாள்.
அட, என்ன இது? இரண்டு எதிரிகளுமே பேசிவிட்டீர்களா? -- ஏனோ இவளுக்கு சிரிப்பு வந்து விட்டது.
ஆகாஷ் நட்போடு நீட்டிய கரங்களைப்
பற்றிக் குலுக்கிவிட்டு, திரும்பியபோது , இலக்கியத்தின் புதிய பரிமாணம் தென்றல் காற்றாய் அவளை வருடியது.

No comments:

Post a Comment