Monday, February 4, 2013

கரிகாலன் விருது



சிங்கப்பூரின் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழத்தில் அமைத்துள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கையின் வழியாக சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் ”கரிகாலன் விருது” சிங்கை எழுத்தாளர்கள் திருமதி கமலாதேவி அரவிந்தனுக்கும் திரு. மா. இங்கண்ணனுக்கும் கிடைத்துள்ளது. 2010ஆம் ஆணடுக்கான விருது திருமதி கமலாதேவியின் “நுவல்” சிறுகதைத் தொகுப்புக்கும் 2011ம் ஆண்டுக்கான விருது திரு. மா. இளங்கண்ணனின் “குருவிக் கோட்டம்” நூலுக்கும் வழங்கப்படுகிறது. இவர்கள் இருவருமே சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



http://tamilmurasu.com.sg/story/17177

No comments:

Post a Comment