Tuesday, April 28, 2009

கூத்துப்பட்டறையில் - 6

கூத்துப்பட்டறையில் - 6

அன்று மாலை இன்னுமொரு அதிசயம் நடந்தது. இவள் எழுதி வைத்திருந்த ஸ்க்ரிப்ட்டை,மாலை வகுப்புக்கான கலந்துரையாடலில் பேசுவதற்காக , இவள் வகுப்புக்குள் போக மாடிப்படி ஏறமுற்பட்டபோது, எதிரே வந்த ஒரு பெண்மணி ,அப்படியே இவளை வந்து அணைத்துக்கொண்டார். so, you are the great சேச்சி ? என்று புன்னகைக்க, ஸ்தம்பித்துப்போனாள். அவர் அணைத்ததோ, பூவாய் சிரித்ததோ,மலர மலர நின்றதோ,எதுவோ ஒன்று. ஆனால் கண்ணைக்கட்டி நிறுத்திய அவரது அழகை எப்படி எழுத?. இத்தனைக்கும் சின்னப்பெண் கூட அல்ல.வயதானவர். இவளை விட எவ்வளவோ பெரியவர். ஆனால் கண்ணை இப்படி அப்படி அசைக்கமுடியவில்லை. என்ன அழகு தெரியுமா? அலையாய் ஒழுகும் கூந்தல், பளீரெனச்சிரிப்பு, பார்த்த உடனேயே, காலம் காலமாய் பார்க்க ஏங்கியதுபோன்ற, ஸ்னேஹம் தோன்றும் பார்வை, யாரிவர். ???
இவள் திகைத்துப்போய் நிற்க, இவர்தான் நாட்டியத்தாரகை சந்திரலேகா, என்று முத்துசாமி சார் அறிமுகப்படுத்த, நேசத்தோடு இவள் நமஸ்காரம் கூறினாள்.[அண்மையில் தான் இவர் நிஜமாகவே வானத்து தாரகையாகிவிட்டார்.]

சென்னையில் பார்க்குமிடமெல்லாம் தலைமுடியைக்கருப்பாக்கிக்கொண்டு நடக்கும் மனிதர்களிடையே, அதுவும் கலைத்துறையைச்சேர்ந்த ஒரு பெண்மணி, வெள்ளை முடியை இப்படி அலையாக விட்டுக்கொண்டு, அது பற்றிய ப்ரக்ஞையே இல்லாமல், சர்வ சாதாரணமாக --- ஆனாலும் அதுவே கூட அவருக்கு என்ன அழகு தெரியுமா?இவளுக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது.

வாருங்கள், இன்று என்னுடைய script discussion,ல் நிங்ஙளின் அபிப்ராயத்தையும் , சொல்லலாம்” என்று இவள் அன்போடு அழைக்க, No, dear,next time, ” என்றவாறே விடைபெற்றுச்சென்றுவிட்டார். அன்றைய வகுப்பில் யதார்த்தநிலையில், நிகழ் கலை வடிவம் பற்றிய அலசல் பிரதானமாக இருக்க, இவளது கேள்விகள் வகுப்பில் ஆய்வுக்குட்பட்டது. [ அதனால் அன்றைய இசை வகுப்பு மாற்றிவைக்கப்பட்டது.]
19ம் நூற்றாண்டின் இறுதியில்தான் நாடகத்துறையில், இயக்குனர் என்பவரைக்கலைஞராகவும்,
இயக்குதல் என்பதை கலையாக்கப்படைப்பின் வளர்ச்சி நிலையாகவும் உணர்ந்த பின்னரே ,இயக்குனருக்கான தனி அங்கீகாரமே கிடைத்துள்ளது.20ம் நூற்றாண்டிலோ
மேலை நாட்டு நாடகங்களின் தாக்கத்தாலேயே, நமது மரபு நாடகங்கள், சற்றே புறக்கணிக்கப்பட்டு,ஆங்கில நாடகத்தழுவலில், சற்று வித்தியாசமான சாயலில்,அரங்கேற்றத்தொடங்கியதும் , நவீனத்தின் பார்வை அவரவர் சொகுசுக்கு ஏற்ப உலா வரத்தொடங்கியது.

தெருக்கூத்தில் வரும் கட்டியங்காரனும் கூட,ideological code ல்[கருத்தியல் சங்கேதத்தில்] தன்னை வெளிப்படுத்திக்கொள்வதை , சமகாலச்சிந்தனையின் வெளிப்பாடாக வரும்போது, ஏனோ ஏற்றுக் கொள்ளமுடியவில்லையே? முதலில் இந்த நவீன நாடகங்களில் மட்டும் ஒவ்வொருவருக்கும் அவரவர் பாணியிலேயே,நிகழ்த்துவதே அவரவரது நவீனத்துவம்?
அல்லது பின் நவீனத்துவம்?என்றால் சார், எண்டெ பாணியில் நடத்துவதே எண்டெ நவீனத்துவமாக, ஞானும் கூட நினைக்கலாம் தானே? முத்துசாமி சார் சளைக்கவில்லை.
அரங்கப்பனுவலின் அமைப்பு, அரங்கக்கூறுகள் நடத்திச்செல்கிற வழியில் உறுப்பெறுவதாக இருக்கவேண்டும். அங்கேதான் எழுத்தாளன் வெற்றி பெறுகிறான். இதற்கு நவீனமோ, பின் நவீனத்துவமோ அல்ல பேசுவது. அங்கே பேசப்படுவது, பார்வையாளனின் கவனத்தை இம்மியும் பிசகாமல், நாடகத்திலேயே இருக்கும்படி ஈர்க்க ஒரு இயக்குனருக்குத் தெரிந்தாலே,
[[foregronding[முன்னணிப்படுத்தல்]ல்]] இயக்குனர் வெற்றி பெற்றதாகக் கொள்ளலாம்?
புதுமை என்பதே சிந்தனையின் புத்தாக்கத்தில் எழும் சின்னத்தீப்பொறிதானே?
நிகழ்கலையில் அதை எப்படி நிங்ஙள் கொண்டு வருகிறீர்கள் என்பதுதானே கேள்வி?

இவள்---இந்தியாவின் தலை சிறந்த இயக்குனரான இப்ராஹிம் அலகாசி[மோலியர் எழுதிய]யின் மனைவிகளுக்கான பள்ளியில், சமநிலைச் சமன்பாடு, சந்த அமைப்பு, வடிவ இயைபு, 3ம் பொருந்தி நிற்றலுக்கும், தர்மவீர் பாரதியின் இருள்யுகம்,நாடகத்தில் அல்காசியின் இயக்கத்தில் முற்றிலும் கரடு முரடான,இழைத்தன்மையில் பரந்த ஆடையணியில் ,பல்வேறுகுழுக்களாக நிற்றலில்,பிணைந்து நிற்கும் இயைபுத்தன்மையை,
parallel codeல் கொள்வதா? unity of actionல் கொள்வதா? இங்குதான் சார் எண்டெ சம்சயம்??

ராமானுஜம் சார் விளக்கினார். ---மிகத்தெளிவாக , பொறுமையாக விளக்கினார். நாடக பாஷையில் நாடகத்துக்கே உரித்தான, விளக்கத்தை அவர் விவரிக்க, துளி மாயை இவளை விட்டு விலகியதாக அப்போதைக்கு நம்பினாள். சசூரின் மொழியியல், பீர்ஸின் குறியியல், ரஷ்ய உருவவியல், அம்பர்ட்டோ ஈக்கோவின் குறியியல் மாற்றம், எனத் தான் படித்த
அனைத்து ஆங்கில நவீனத்துவத்தின் பார்வைகள் பற்றியும் இவள் பேசினாள். பிறகுதான் ராமானுஜம் சார் ,இவளது ஸ்க்ரிப்டிலிருந்து, காட்சிப்படிமங்களை விளக்கத்தொடங்கினார். ரவீந்திரன் சார், ஒலி, ஒளி ஊடகத்தின் செயல் பாட்டை, இவளது ஊடகத்தில் எப்படி
கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும் என்று விளக்கினார். மொத்தத்தில் theoritical research அல்லது original research,ல், சிந்தனைப்புலம், மொழியியல் அறிவு மட்டுமே, தெளிவாக இருந்தால், எல்லா சம்சயங்களையும் தூக்கித்தூர எறிந்துவிட்டு, எண்டெ ராஜபாட்டையில் ,ஞான் துணிகரமாக, ஸ்வாஸம் விடலாம் எனும் தைர்யம்
வந்தது. அன்றிரவே சிங்கையிலிருந்து கொண்டு வந்த ஸ்க்ரிப்டை முழு மூச்சாய் எழுதி முடிக்கும் வேகம் பிறந்தது. ஆனால் அரை மணினேரம் கூட எழுத முடியவில்லை.காரணம்
கணவர் அன்று இரவு தொலைபேசியில் இவளை அழைக்கவில்லை . இவளுக்கு மிகவும் கவலையாக இருந்தது.

காலை, அல்லது மாலை, தினமும், கணவர், [2 நாள் குழந்தைகள்]என அழைப்பார்கள், அன்று முழுவதும் அழைக்கவில்லை. அதுவும் அன்று ஒரு முக்கிய நாளும் கூட. குளித்து, பூஜை முடித்து, இவள் வகுப்புக்கு, போய் அமர்ந்த போதும் , கணவரின் தொலைபேசி அழைப்பைக் காணோம். கவலையின் எல்லையில்------------???

{தொடரும்}

கருத்துக்களைத் தெரிவிக்க மின்னஞ்சல்
செய்யவேண்டிய முகவரி:
kamalam.online@yahoo.com

No comments:

Post a Comment