Friday, March 27, 2009

கடிதம் !!!!!

அன்புள்ள கமலாதேவி அவர்கட்கு,
உங்களின் வலைப்பதிவை நேற்றுதான் கண்டேன். இரவுமுழுவதும் கணிணிப்பெட்டியை விட்டு அந்தண்டை இந்தண்டை நகரவிடாமல் செய்துவிட்டீர்கள்.
பெண்களின் எழுத்தில் எனக்கு எப்போதுமே பெரிதாக ஈடுபாடு இருந்ததில்லை. தமிழ் நாட்டில் எழுதும் சிலரின் படைப்புக்களைப் படித்ததாலேயே மட்டுமல்ல.
ஆண்களின் தீவிரமும் ஆழ்ந்த சிந்தனையும் ஒருபோதும் பெண்களிடம் இருந்ததில்லை.
சீக்கிரத்திலேயே முடிவுக்கு வந்துவிடுவார்கள். அல்லது முடிவை தங்களுக்கேற்ப எழுதிவிட்டு அவர்களும்
ஏதோ சாதித்த இலக்கியவாதிகளாக தங்களை முன்னிலைப்படுத்தும்போது என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்ததேயில்லை.
ஆனால், கமலாதேவி, நீங்ஙள் நீங்களாகவே எழுதியிருக்கிறீர்கள். உங்களின் ஒவ்வொரு வரிகளிலும் நீங்கள் சஞ்சரிக்கிறீர்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, உங்களின் தமிழ் எனக்குப் பிடித்திருக்கிறது. மானாட்டில் சந்தித்த கட்டுரைத்தொடர் அற்புதமான இடுகை.
ஆனால் புரியாத ஒரே விடயம். தங்களின் அருமையான இந்த வலைப்பதிவை ஏன், தமிழ் மணம், திரட்டி, அல்லது வலைப்பதிவாளர்
தளத்தில் கூட நீங்கள் இணைக்கவில்லை?

வாழ்த்துக்களுடன்
ம.ராமசாமி, சென்னை.



அன்புடையீர்,
நிங்ஙளின் அன்பான வாழ்த்துக்கு நன்றி. பெண்களின் எழுத்தில் ஆடவ எழுத்தாளருக்கே இந்த அலட்சியம் உண்டு.
அது அவரவர் பார்வை அல்லது விருப்பம் .அணுகிப் படித்ததில்லை என்பதாலேயெ என்று மட்டும் தான் சொல்வேன்,
வேறு என்ன ஞான் சொல்ல முடியும்?
மற்ற வலைத்தளங்களில் இணைப்பது பற்றி எண்டெ கணிணி ஆசிரியர்,சகோதரர் மணியத்திடம் பேசுகிறேன்.
தவிர ஞான் இப்பொழுதுதானே இந்த வலைப்பதிவைத்தொடங்கியுள்ளேன்.
நிங்ஙளின் கருத்தை யோசிக்கலாம். நன்றி.
கமலம்

No comments:

Post a Comment