Friday, March 20, 2009

கடிதங்கள்

கடிதங்கள்

அன்புள்ள கமலாதேவி அவர்கட்கு,
உங்களின் வலைப்பதிவை, சிங்கையிலுள்ள என் மகள் மூலம் கிடைக்கப்பெற்றேன்.
மற்றவலைப்பதிவில் உள்ளதுபோலன்றி,முழுக்க முழுக்க,இலக்கியப்பதிவாக உள்ளது ஆச்சர்யம் தருகிறது.

உங்கள் எழுத்தில் மலையாளம் விரவிக்கிடக்கிறது. முதலில் அது திகைப்பாக இருந்தாலும் , படிக்கத்தொடங்கியபின்னர், அதுவே எனக்கு சுவையான வாசிப்பாகப் போய்விட்டது. பெண்ணியம் பற்றிய உங்களின் பார்வையை அப்படியே என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆனால் மீண்டும் , ஒருமுறை படித்தபிறகு, இது உங்கள் பார்வை, என்று விட்டு விடுகிறேன். கடந்த சில நாட்களாக உங்களின் கட்டுரைகளைக்காணோம்.இப்பொழுது உண்மையிலேயே உங்கள் எழுத்துக்காக
ஏங்கத் தொடங்கிவிட்டேன்.தயவுசெய்து தொடருங்கள் உங்கள் எழுத்தை.

மணிமேகலை.
மும்பாய்.




அன்பின் மணிமேகலை,

உங்களின் எழுத்திலிருந்து ,னிரம்ப வாசிப்பவர்கள் என்று தெரிகிறது.
கற்றுணர்ந்த நிங்ஙளே வலைப்பதிவில் வராமல் தனிமடலில் கருத்துரைத்ததிலிருந்து, , என்னால் யூகிக்கமுடிகிறது.

எண்டெ எழுத்தை சிலாகித்தமைக்கு முதலில் எண்டெ நன்றி.
எண்டெ எழுத்தில் மலையாள வாடை, தவிர்க்க இயலாதது.--அது. எண்டெ ஸ்வாஸம்,
பிறப்பால், வளர்ப்பால், வாழ்வால், ரசனையால், உணவால், உணர்வால், கூட ஞான் மலையாளிதான். முழுக்க முழுக்க மலையாளச்சூழலில் வாழ்ந்து, வரும் ஞான் ,இப்படித்தானே தமிழ் எழுதமுடியும்?

அடுத்து, பெண்ணியம் பற்றிய எண்டெ பார்வை---
மணிமேகலை, நிங்ஙள் ஓய்வு பெற்ற ஆங்கிலப்பேராசிரியை, என்று முந்தைய கடிதத்தில் எழுதியிருந்தீர்கள. பெண்ணின் சுயம் அழிக்கப்படும் இடத்து,பெண்ணை புழுவாய் அடிமைப்படுத்துமிடத்து, அவளின் உரிமைகள் மறுக்கப்படுமிடத்து ,,பெண் போர்க்குரல் எழுப்புவதில் தவறில்லை. ஆனால் பெண்ணியம் என்றால் என்னவென்றே கூட தெரியாமல், சிலர் எழுதும், அல்லது எழுப்பும் பம்மாத்து அலட்டல்களை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது..

இன்றும் பெரியோரைக் கண்டால் நமஸ்கரிப்பவள். என்னிலும் அறிவார்ந்தவர்கள் என்று மட்டுமல்ல, சான்றோர், கூட ஞான் தீர்மானிக்கும் வயதானவர்கள், இயலாத நிலையிலும் மற்றவர்கட்கு உதவுபவர்கள்,, என எல்லோருமே எனக்கு பெரியவர்கள் தான். அப்படியிருக்க அங்கே எங்கே வந்தது பெண்ணீயம்? னிரம்பப் பேசுவோம்.
னிங்ஙளுக்காகவே இனி தொடர்கிறேன் எண்டெ கட்டுரைகளை.

கமலம்




கமலா அம்மா அவர்கட்கு,

உங்கள் மானாட்டு அனுபவங்கள் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. ஆனால் ஒரு பெருங்குறை, அந்தப்புகைப்படங்களையெல்லாம் ஏன் போடமாட்டேன்கிறீர்கள்?
உங்களின் வானொலி நாடகங்கள் சில கேட்டிருக்கிறேன். விசாரித்ததில் நீங்கள் மலையாள எழுத்தாளர் என்றார்கள். தமிழ் முரசில் உங்களின் சிறுகதைகள் படித்தபிறகே., உங்களின் வலைப்பதிவு கிடைத்தது.

சிங்கையில் கட்டுமானத்தொழிலாளியாக பணிபுரிகிறேன். என்னுடைய நண்பன், கார்த்திக்கின் கணிணியில் , எல்லா வலைப்பதிவும் படிக்க முடியும். தமிழ் நாட்டிலிருந்து வந்து , அன்றாடத் தொழிலாளியாகப் பணிபுரியும் எனக்கு, வானொலியும் ,கணிணியும் தான் ஒரே ஆதரவு. அம்மா, நீங்கள் நாடகாசிரிசிரியர், எனக்கும் நாடகம் எழுதும் ஆர்வம் உண்டு. திருச்சியில் படிக்கும்போது, நாங்கள் மாணவர்கள் சேர்ந்து நாடகங்கள் எழுதி அரங்கேற்றியிருக்கிறோம். சிங்கையில் எனக்கு நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமா?

செந்தில்குமார்,
சிங்கப்பூர்



அன்புள்ள செந்தில்குமார்,

அம்மா என்றழைத்த நிமிஷமே எண்டெ மகனாகவே வரித்துவிட்டேன் நிங்ஙளை.
எண்டெ மானாட்டு போட்டோக்களையெல்லாம் பதிவில் சேர்ர்க்கும் எண்ணமுண்டு. ஆனாலும் அதுகூட தேவையா, என்றும்
சிலசமயம் தோன்றிவிடுகிறது.
தமிழ்னாட்டிலிருந்து இங்குவந்து பணிபுரியும் அலுவலுக்கிடையேயும் நண்பனின் கணிணியில் , இலக்கியம் ரசிக்கும் நின்டெ ஆர்வம் , மனதை நெகிழ்த்துகிறது.
செந்தில், நாடக சம்பந்தமான நிண்டெ கேள்விகட்கு , தொலைபேசியில் விளக்குகிறேன்.
தொலைபேசி எண்--67624055

கமலம்


பின்னூட்டத்தில் வர இயலாதர்கள், கருத்துக்களைத்
தெரிவிக்க மின்னஞ்சல் செய்யவேண்டிய முகவரி:
kamalam.online@yahoo.com

2 comments:

  1. கமலம்,
    உங்கள் மலைத்தமிழின் ரசிகன் என என் பெயரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

    திவாகர்

    ReplyDelete
  2. திவாகர்,
    மலைத்தமிழ் என்ற நிலையில் ஏற்றுக்கொண்டதே மகிழ்ச்சி. நன்றி. நன்றி.
    கமலம்

    ReplyDelete